பிரபல நடிகை சாயா சிங் வீட்டில் ஏற்பட்ட சோகம்.. அதிரடி முடிவு எடுத்த நடிகை
கன்னடத்தில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான முன்னாடி என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் நடிகை சாயா சிங். இவர் தனுஷ் நடித்த திருடா திருடி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார், முதல் படத்திலேயே அதிரடி ஆட்டம் போட ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
ஆரம்பமே பெரிய வரவேற்பு கிடைத்தாலும் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. விஜய்யுடன் ஒரு படத்தில் மட்டும் சாமி பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்துவரும் இவர் தற்போது கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளிலும் சீரியல்களி நடித்துள்ளார்.
இந்த நிலையில் பெங்களூரு பசவேஷ்வர் நகரில் உள்ள சாயா சிங்கின் தாயார் சாமனலதா வீட்டில் திருட்டுச்சம்பவம் நடந்துள்ளது.வீட்டில் இருந்த 66 கிராம் தங்கம் மற்றும் 150 கிராம் வெள்ளி ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளன.
இதுகுறித்து அவர்கள் உடனே புகார் அளிக்க போலீசார் தற்போது குற்றவாளிகளை வைத்து செய்து தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.