7 3 scaled
சினிமாசெய்திகள்

படத்தை நிறுத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வந்த ரஜினி.. இயக்குனர் ஷங்கர் செய்த விஷயம்

Share

படத்தை நிறுத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வந்த ரஜினி.. இயக்குனர் ஷங்கர் செய்த விஷயம்

படத்தை நிறுத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வந்த ரஜினி.. இயக்குனர் ஷங்கர் செய்த விஷயம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவான திரைப்படம் 2.0.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. 2010ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் எந்திரன். இதனுடைய இரண்டாவது பாகமாக தான் 2.0 உருவானது.

இப்படத்தில் முதன் முதலில் ரஜினியுடன் இணைந்து ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிக்கவிருந்தார். ஆனால், அவரால் நடிக்கமுடியாமல் போக கமல் ஹாசனை தேர்வு செய்துள்ளனர். பின் அவராலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போக இறுதியாக தான் அக்ஷய் குமாரை வில்லன் ரோலில் நடிக்கவைத்துள்ளனர்.

இந்த நிலையில், 2.0 படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரத்தில் ரஜினியின் உடல்நிலை காரணமாக படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 20% சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரஜினி இப்படத்திலிருந்து விலகிவிடலாம் என முடிவு செய்துள்ளார். இதுவரை தயாரிப்பு நிறுவனம் செய்த செலவிற்கான தொகையை கொடுத்து விடுகிறேன் என்றும் அவரே கூறியுள்ளார்.

ஆனால், இயக்குனர் ஷங்கர் கதையில் சில மாற்றங்களை கொண்டு வந்து ரஜினிக்கு சிரமம் கொடுக்காமல் படத்தில் நடிக்க வைத்துள்ளார். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....