99359989
சினிமாசெய்திகள்

படு பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் புஷ்பா 2 படத்தின் OTT இத்தனை கோடிக்கு விலைபோனதா?

Share

படு பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் புஷ்பா 2 படத்தின் OTT இத்தனை கோடிக்கு விலைபோனதா?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.

இவரது திரைப்பயணத்தில் நிறைய ஹிட் படங்கள் உள்ளது, அதில் ஒன்று தான் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் தயாரான இப்படம் இந்திய லெவலில் வெளியாகி சுமார் ரூ. 500 கோடி வரை இந்திய முழுவதும் வசூல் செய்தது.

வியாபாரம், விமர்சனம் இரண்டிலும் கலக்கிய புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தயாராகி விறுவிறுப்பாக நடக்கிறது.

இந்தியா, வெளிநாடு என படப்பிடிப்பு நடந்துவரும் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகின. அதில் இரவில் அல்லு அர்ஜுன் வருவது போன்றும், அவரது வருகையை மக்கள் கொண்டாடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அண்மையில் அல்லு அர்ஜுன் தனது பிறந்தநாளை கொண்டாடினார், அன்று புஷ்பா 2 படத்தின் டீஸர் வெளியாகி பல சாதனைகளை செய்தது.

இந்த நிலையில் புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ. 100 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாகவும், தெலுங்கு திரையுலகில் ரூ. 100 கோடிக்கு ஓடிடி விற்பனை ஆகியிருப்பது இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 72
செய்திகள்உலகம்

ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்களுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு: வெள்ளை மாளிகையில் சந்திக்க விருப்பம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலக் குழுவினர் நிலவைச் சுற்றி வந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத்...

world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...