99359989
சினிமாசெய்திகள்

படு பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் புஷ்பா 2 படத்தின் OTT இத்தனை கோடிக்கு விலைபோனதா?

Share

படு பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் புஷ்பா 2 படத்தின் OTT இத்தனை கோடிக்கு விலைபோனதா?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.

இவரது திரைப்பயணத்தில் நிறைய ஹிட் படங்கள் உள்ளது, அதில் ஒன்று தான் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் தயாரான இப்படம் இந்திய லெவலில் வெளியாகி சுமார் ரூ. 500 கோடி வரை இந்திய முழுவதும் வசூல் செய்தது.

வியாபாரம், விமர்சனம் இரண்டிலும் கலக்கிய புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தயாராகி விறுவிறுப்பாக நடக்கிறது.

இந்தியா, வெளிநாடு என படப்பிடிப்பு நடந்துவரும் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகின. அதில் இரவில் அல்லு அர்ஜுன் வருவது போன்றும், அவரது வருகையை மக்கள் கொண்டாடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அண்மையில் அல்லு அர்ஜுன் தனது பிறந்தநாளை கொண்டாடினார், அன்று புஷ்பா 2 படத்தின் டீஸர் வெளியாகி பல சாதனைகளை செய்தது.

இந்த நிலையில் புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ. 100 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாகவும், தெலுங்கு திரையுலகில் ரூ. 100 கோடிக்கு ஓடிடி விற்பனை ஆகியிருப்பது இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...