4 49
சினிமாசெய்திகள்

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்

Share

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்

கோமாளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக முத்திரை பதித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கத்தில் 2022ல் வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இந்த படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து, கதாநாயகனாக நடிக்க தொடங்கி விட்டார்.

தற்போது, இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் Love Insurance Kompany மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தி ஈஸ்வரன் இயக்கத்தில் அடுத்து நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.

தற்போது, இந்த தகவல் குறித்து கூடுதல் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, பிரதீப் நடிக்கப்போகும் அடுத்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தயாரிப்பு நிறுவனம் தெலுங்கு சினிமாவில் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனமாக வலம் வருகிறது. தற்போது அஜித் நடிப்பில் உருவாகும் குட் பேட் அக்லீ படத்தையும் மைத்ரி மூவி நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...