Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

Share

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக வலம் வந்தவர் தான் கேரோலின்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான வித்யா நம்பர் ஒன் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் பின் சன் டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார். தமிழ் மட்டுமில்லாது மலையாள சீரியல்களிலும் நடித்திருந்தார்.

பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே மேக்கப் ஆர்டிஸ்ட் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். கர்ப்பமான கேரோலினுக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

குழந்தை பிறந்து 5வது மாதத்தில் தாய்ப்பால் கொடுத்துவிட்டு திரும்பும் போது தலை சுற்றல் வந்து விழுத்துள்ளார், மருத்துவமனையில் சேர்த்த போது வலிப்பு ஏற்பட தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது நடிகை கோமாவிற்கு செல்ல ஒரு நாளைக்கு ரூ. 90 ஆயிரம் வரைக்கும் இவருக்கு மருத்துவ செலவு செய்யப்பட்டிருக்கிறது. 6 வருடங்களுக்கு மேலாக கோமாவில் இருந்தவரை நிறைய பண கஷ்டங்களை தாண்டி குடும்பத்தினர் மீட்டுள்ளனர்.

கோமாவில் இருந்து மீண்ட கேரோலினுக்கு தனது கணவர் மற்றும் குழந்தையே யார் என்று தெரியவில்லையாம். பிறகு அவருடைய திருமண புகைப்படங்கள் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த வீடியோக்கள் என எல்லாவற்றையும் காட்டி இருக்கிறார்கள்.

அதற்கு பிறகும் இவருக்கு நினைவு வரவில்லையாம். தான் கோமாவில் இருந்த விஷயத்தை கேரோலின் சமீபத்திய பேட்டியில் கூற ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...