24 6642f90ddcc4e
சினிமாசெய்திகள்

அப்போ சூப்பர்ஸ்டார், இப்போ தளபதி.. பிரபல இயக்குனர் கூறிய விஷயம், என்ன தெரியுமா

Share

அப்போ சூப்பர்ஸ்டார், இப்போ தளபதி.. பிரபல இயக்குனர் கூறிய விஷயம், என்ன தெரியுமா

ரஜினிக்கு பின் விஜய் தான் சூப்பர்ஸ்டார் என்ற பேச்சு தொடர்ந்து பல இடங்களில் பேசப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் கூட சமூக வலைத்தளத்தில் எழுந்தது.

ஆனால், ரஜினிகாந்த் எனக்கும் விஜய்க்கும் எந்த போட்டியும் இல்லை என கூறி அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அதே போல் விஜய்யும், சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான் என கூறியது அனைத்திற்கும் முடிவாக அமைந்தது.

சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கி சூப்பர்ஹிட் திரைப்படத்தை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. இவர் ரஜினியின் அருணாச்சலம் படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள அரண்மனை 4.

இப்படத்தின் ப்ரோமோ விழாவில் கலந்துகொண்ட சுந்தர் சி-யிடம் அருணாச்சலம் படத்தில் இப்போது யார் நடித்தால் நன்றாக இருக்கும் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு “கண்டிப்பாக விஜய் தான். அப்போது சூப்பர்ஸ்டார் என்றால் இப்போ தளபதி” என கூறினார் சுந்தர் சி. இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...