25 68452e0cc970f
சினிமாசெய்திகள்

நடிகருடன் 2 ஆண்டுகள் டேட்டிங் செய்த தீபிகா படுகோன்.. பிரேக் அப் செய்த நடிகர்!

Share

மாடலிங் துறையில் இருந்து இப்போது நடிகராக வளர்ந்துள்ளார் முசமில் இப்ராஹிம். இவர் நடிகை தீபிகா படுகோனை 2 ஆண்டுகள் காதலித்து வந்ததாகவும், பின் பிரேக் அப் செய்துவிட்டதாகவும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகை தீபிகா படுகோன் 2000ம் ஆண்டு மும்பைக்கு வந்துள்ளார். அதன்பின் மாடலிங் துறையில் வெற்றிகரமாக இயங்கி, பின் பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். அந்த காலகட்டத்தில் முசமில் இப்ராஹிம் மற்றும் தீபிகா படுகோன் காதலித்துள்ளனர்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் முசமில் இப்ராஹிம் வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது “நாங்கள் இரண்டு ஆண்டுகள் காதலித்தோம். தீபிகா மிகவும் உறுதியாக இருந்தார். ஏனென்றால் அவர் இறகுப்பந்து வீரர் பிரகாஷ் படுகோனின் மகள். அவரை அனைவருக்கும் தெரியும். அப்போது நான் ஸ்டாராக இருந்தேன். தீபிகா சாதாரணமாக இருந்தார். இப்போது அவர் சூப்பர்ஸ்டாராகிவிட்டார். என்னை யாருக்கும் தெரியவில்லை” என கூறியுள்ளார்.

டேட்டிங் குறித்து பேசிய முசமில் இப்ராஹிம், “அப்போது சிறுவர்களாக இருந்தோம். மலையில் ரிக்ஷவில் டேட்டிங், அது க்யூட்டாக இருக்கும். நான் அப்போது அவரை விட அதிகம் சம்பாதித்து வந்தேன். நான் கார் வாங்கியபோது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதன்பின், நான் ரிக்ஷவில் டேட்டிங் சென்றதே இல்லை. அந்த நினைவுகள் மிகவும் புத்துணர்வாக இருக்கின்றன. பணம் இல்லாமலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்” என்றார்.

மேலும் முசமில் இப்ராஹிம், அவர்தான் நடிகை தீபிகாவை பிரேக் அப் செய்ததாகவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...