25 68452e0cc970f
சினிமாசெய்திகள்

நடிகருடன் 2 ஆண்டுகள் டேட்டிங் செய்த தீபிகா படுகோன்.. பிரேக் அப் செய்த நடிகர்!

Share

மாடலிங் துறையில் இருந்து இப்போது நடிகராக வளர்ந்துள்ளார் முசமில் இப்ராஹிம். இவர் நடிகை தீபிகா படுகோனை 2 ஆண்டுகள் காதலித்து வந்ததாகவும், பின் பிரேக் அப் செய்துவிட்டதாகவும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகை தீபிகா படுகோன் 2000ம் ஆண்டு மும்பைக்கு வந்துள்ளார். அதன்பின் மாடலிங் துறையில் வெற்றிகரமாக இயங்கி, பின் பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். அந்த காலகட்டத்தில் முசமில் இப்ராஹிம் மற்றும் தீபிகா படுகோன் காதலித்துள்ளனர்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் முசமில் இப்ராஹிம் வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது “நாங்கள் இரண்டு ஆண்டுகள் காதலித்தோம். தீபிகா மிகவும் உறுதியாக இருந்தார். ஏனென்றால் அவர் இறகுப்பந்து வீரர் பிரகாஷ் படுகோனின் மகள். அவரை அனைவருக்கும் தெரியும். அப்போது நான் ஸ்டாராக இருந்தேன். தீபிகா சாதாரணமாக இருந்தார். இப்போது அவர் சூப்பர்ஸ்டாராகிவிட்டார். என்னை யாருக்கும் தெரியவில்லை” என கூறியுள்ளார்.

டேட்டிங் குறித்து பேசிய முசமில் இப்ராஹிம், “அப்போது சிறுவர்களாக இருந்தோம். மலையில் ரிக்ஷவில் டேட்டிங், அது க்யூட்டாக இருக்கும். நான் அப்போது அவரை விட அதிகம் சம்பாதித்து வந்தேன். நான் கார் வாங்கியபோது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதன்பின், நான் ரிக்ஷவில் டேட்டிங் சென்றதே இல்லை. அந்த நினைவுகள் மிகவும் புத்துணர்வாக இருக்கின்றன. பணம் இல்லாமலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்” என்றார்.

மேலும் முசமில் இப்ராஹிம், அவர்தான் நடிகை தீபிகாவை பிரேக் அப் செய்ததாகவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...