24 6729f86c5193c 7
சினிமாசெய்திகள்

ரஜினி, கமல் இருவருக்கும் உள்ள வித்தியாசம்.. லோகேஷ் கனகராஜின் அதிரடி பதில்

Share

ரஜினி, கமல் இருவருக்கும் உள்ள வித்தியாசம்.. லோகேஷ் கனகராஜின் அதிரடி பதில்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. லியோ படத்தை தொடர்ந்து இவர் இப்படத்தை இயக்கி வரும் நிலையில், முதல் முறையாக ரஜினிகாந்துடன் கைகோர்த்துள்ளார்.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்து பேசியுள்ளார்.

அதில், “ரஜினி சார் இயக்குனர்களின் நடிகர். அவர் படத்தில் நடிக்கும் சக நடிகர் எப்படி நடிக்கிறார் என்பதை கவனித்து கொண்டு பதிலுக்கு நாம் எப்படி நடிக்க வேண்டும் என எப்போதும் யோசித்து கொண்டே இருப்பவர்.

கமல் சார் அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒருவர். அவர் ஒரு தொழில்நுட்ப கலைஞர் என்று அவரே கூறுவார். ஆனால், இருவருமே கேமராவுக்கு முன்பு நடிகர் என்பதை மறந்து அந்த காதாபாத்திரங்களாகவே மாறிவிடுவார்கள்” என்று கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கமல்ஹாசன் ‘விக்ரம்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...