சினிமாசெய்திகள்

சம்பளம் தானே வாங்குறீங்க.. பிக் பாஸ் போட்டியாளர்களை விளாசிய கமல்

1 1 12 scaled
Share

சம்பளம் தானே வாங்குறீங்க.. பிக் பாஸ் போட்டியாளர்களை விளாசிய கமல்

பிக் பாஸ் 7ம் சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், கமல்ஹாசன் ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு ஆதரவாக தான் எப்போதும் பேசுகிறார் என விமர்சனங்கள் வருகிறது.

மாயா – பூர்ணிமா கேங்குக்கு அவர் ஆதரவாக பேசுகிறார் என சமூக வலைதளங்களில் கமலை நெட்டிசங்கள் வறுத்தெடுத்த நிலையில் இன்றைய எபிசோடில் முதல் முறையாக கோபமாக பேசி இருக்கிறார்.

“இந்த வீட்டில் யாரும் எனக்கு favourite இல்லை. இவர் தோக்கணும், இவர் ஜெயிக்கும் என எனக்கு எதுவும் இல்லை. நான் என்ன விமர்சிக்க வேண்டும் என நீங்க முடிவெடுக்க முடியாது.”

“நான் உங்க கூட விளையாட வரல, முடிந்தால் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த தான் வந்திருக்கிறேன்.”

“யாரும் இங்க பொது நலனுக்காக இல்லை. நான் உட்பட எல்லோரும் சம்பளம் தான் வாங்குகிறோம். அதற்கு கடமைக்கு மரியாதையை ஒழுங்காக செய்யுங்க. நான் என்ன பேசணும் என நீங்க எனக்கு டைலாக் எழுதி கொடுக்காதீங்க” என கமல் போட்டியாளர்களை தாக்கி பேசி இருக்கிறார்.

பூர்ணிமா நேற்றைய எபிசோடில் கமல் பேசிவிட்டு சென்றபின், ‘கேப்டன் பதவியை அதிகார துஷ்ப்ரயோகம் செய்தேன், என்னை மட்டும் திட்டினார், தினேஷ் விஷயத்தை கேட்கவே இல்லையே’ என பூர்ணிமா பேசி இருந்தார். அதை விமர்சித்து தான் கமல் இன்று கோபமாக பேசி இருக்கிறார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...