R 12 scaled
சினிமாசெய்திகள்

நயன்தாரா படத்தை நீக்க இதுதான் காரணமா?

Share

நயத்தாராவின் அன்னபூரணி திரைப்படம் தற்போது சிக்கலில் இருக்கிறது. இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா, நயன்தாரா நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படம் அன்னபூரணி. உணவை மையமாக வைத்து உருவான இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், சத்யராஜ், கார்த்திக் குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

திரையரங்கில் 4 வாரங்கள் ஓடிய பின் இப்படம் ஓடிடியில் வெளிவந்தது. ஆனால், திடீரென இப்படத்தில் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் இதற்கு காரணம் படத்தில் இருக்கும் ஒரு வாசம் தான் என கூறப்படுகிறது.

நயன்தாரா தான் பிராமண பெண், பெருமாளை வணங்கும் கையால் எப்படி அசைவம் சமைப்பது. நான் அசைவம் சமைக்க மாட்டேன் என கூறி வருத்தப்படுவார். அப்போது, நடிகர் ஜெய் ‘நம்முடைய விருப்பு வெறுப்பை தாண்டி கெஸ்ட்டுக்கு சமைத்து கொடுக்க வேண்டும். பல பேர் சபரிமலைக்கு மாலை போட்டு மீன் விற்கிறார்கள், கறி வெட்டுகிறார்கள். பின் மாலை வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு பூஜை செய்கிறார்கள். தொழில் வேறு, பக்தி வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளாதே” என கூறுவார்.

அதன்பின் “வனவாசம் சென்ற ராமர் மற்றும் லக்ஷ்மணன் வனத்தில் பசி எடுத்தபோது மானை வேட்டையாடி சீதையுடன் இணைந்து சாப்பிட்டார்கள் என வால்மிகி இராமாயணத்தில் கூறியுள்ளார். பெருமாளுடைய அவதாரம் தானே ராமர்” என ஜெய்யின் வசனங்கள் இருக்கும். இது தான் அன்னபூரணி படத்தை ஓடிடியில் இருந்து நீக்க காரணம் என சொல்லபடுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...