tamilni 125 scaled
சினிமாசெய்திகள்

45 வயது பெண்ணா இவர்? வேற லெவல் வொர்க் அவுட் வீடியோ வெளியிட்ட ஜோதிகா..!

Share

45 வயது பெண்ணா இவர்? வேற லெவல் வொர்க் அவுட் வீடியோ வெளியிட்ட ஜோதிகா..!

நடிகை ஜோதிகாவுக்கு தற்போது 45 வயதாகும் நிலையில் அவரது குழந்தைகளும் நன்றாக வளர்ந்து விட்ட நிலையில் இப்போது கூட அவர் உடலை ஃபிட்டாக வைத்திருக்க தீவிரமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார். அவ்வப்போது ஜோதிகா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெகு தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ’45 வயதில் எவ்வளவு கடினமான உடற்பயிற்சிகளை எல்லாம் அசால்டாக ஜோதிகா செய்கிறார் என்றும் அவர் வேற லெவல் தன்னம்பிக்கை உடையவர் என்றும் கூறி வருகின்றனர்

இந்த வீடியோவுக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ், நூற்றுக்கணக்கான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிகா பெண்ணினத்திற்கு ஒரு முன்னுதாரணம் என்றும் அவரை மாதிரி மற்ற பெண்களும் தீவிர உடற்பயிற்சி செய்தால் உடம்பை மட்டும் இன்றி மனதையும் பிட்டாக வைத்திருக்கலாம் என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது

மேலும் இந்த பதிவில் அவர் ’உடற்பயிற்சி என்பது நீங்கள் எடையை குறைப்பதற்காக மட்டும் இன்றி, நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை பெறுவதற்கும்’ என்று கேப்ஷனாக ஜோதிகா பதிவு செய்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...