24 6656dabed2e7e
சினிமாசெய்திகள்

இசை பெரிதா? பாடல் பெரிதா? கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிய ரஜினிகாந்த்

Share

இசை பெரிதா? பாடல் பெரிதா? கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிய ரஜினிகாந்த்

இமயமலைக்கு புறப்படும் நடிகர் ரஜினிகாந்திடம் கேட்கப்பட்ட மோடி மற்றும் இசை குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் சென்றது பேசுபொருளாகியுள்ளது.

‘வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், கடந்த ஒரு வாரம் அபுதாபியில் ஓய்வெடுக்க சென்று சென்னை திரும்பினார்.

இதனையடுத்து, இன்று அதிகாலை ஒரு வாரகால ஆன்மிக பயணம் செல்ல இமயமலை கிளம்பியுள்ளார். இவர், ஒவ்வொரு வருடமும் இமயமலை பாபாஜி குகை, கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

கொரோனா காலங்களில் ரஜினிகாந்த் பயனம் மேற்கொள்ள முடியாத நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் இமயமலை பயணத்தைத் தொடங்கினார்.

இன்று அதிகாலை ஆன்மீக பயணமாக இமயமலை கிளம்பிய ரஜினிகாந்த், ஜூன் மாதம் முதல் வாரத்தில் சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில், இமயமலை புறப்படும் நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம், மீண்டும் மோடி ஆட்சியை கைப்பற்றுவாரா என்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர் அரசியல் கேள்விகள் வேண்டாம் என்று கூறினார்.

பின்னர், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை சர்ச்சையை குறிப்பிட்டு “பாடல் பெரிதா? இசை பெரிதா?” என்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே “அண்ணா, நோ கமெண்ட்ஸ்!” என்று கூறினார்.

Share
தொடர்புடையது
ap26059256811672
செய்திகள்உலகம்

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: பிரம்மாண்டமான நடவடிக்கை என டிரம்ப் அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை இலக்கு வைத்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள்...

15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...