24 665b315eec262
சினிமாசெய்திகள்

தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்கிறாரா மதுரை முத்து- அவரது மனைவி போட்ட பகீர் தகவல்

Share

தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்கிறாரா மதுரை முத்து- அவரது மனைவி போட்ட பகீர் தகவல்

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டான்ட்அப் காமெடி செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மதுரை முத்து.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு சன் டிவியில் அசத்தப்போவது யாரு, சன்டே கலாட்டா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மேலும் விஜய் டிவி பக்கமே வந்தவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகள், சில சீரியல்களிலும் நடித்தார்.

மதுரை முத்துவின் மனைவி லேகா 2016ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதன்பின் சில மாதத்தில் மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை மதுரை முத்து மறுமணம் செய்தார்.

வயதான பெற்றோர் மற்றும் 2 மகள்கள் இருக்கிறார்கள், அவர்களுக்காக மறுமணம் செய்தேன் என முத்து திருமணம் குறித்து பேசியிருந்தார். இந்த நிலையில் அவரது இரண்டாவது மனைவி நீது தனது இன்ஸ்டாவில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எனக்கு என்று ஒரு உயிர் வேண்டும், அது என்னை மட்டுமே நேசிக்க வேண்டும்.

அவருக்காகவே நான் பொட்டு வைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் ஏமாந்து போய்க்கொண்டே இருக்கிறேன் என்று அழுதபடி பதிவிட்டிருந்தார்.

இப்படி தொடர்ந்து சோகமான வீடியோவை வெளியிடுவதால் அவருக்கும் முத்துவிற்கும் ஏதாவது பிரச்சனையா, பிரிந்துவிட்டார்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...