tamilni 97 scaled
சினிமாசெய்திகள்

சென்னைல டிராவல் பண்ண பிடிக்கல.. 10 வருசமா வலி மட்டும் தான் மிச்சம் இருக்கு! டிடி கண்ணீர் பேட்டி

Share

சென்னைல டிராவல் பண்ண பிடிக்கல.. 10 வருசமா வலி மட்டும் தான் மிச்சம் இருக்கு! டிடி கண்ணீர் பேட்டி

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான DD என்று செல்லமாக மக்கள் மத்தியில் அழைக்கப்படுபவர் தான் திவ்ய தர்ஷினி.

டிடி இளம் வயதில் இருந்து விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதுவும் சூப்பர் சிங்கர் என்றால் டிடி தான். அவ்வளவுக்கு சிறப்பாக கொண்டு நடத்துவார்.

வெள்ளித்திரையிலும் சில படங்களில் டிடி நடித்துள்ளார். அதுமட்டுமின்றி விஜய் அவார்ட்ஸ், பெரிய நடிகர்களின் ஆடியோ லான்ச் என்றால் டிடி தான் தொகுத்து வழங்குவார். மேலும் கல்லூரியில் ஆசிரியராகவும் இவர் பணிபுரிந்து இருக்கிறார்.

அவரது காலில் பிரச்சனை உள்ளதால் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். டிடியால் நிறைய நேரம் ஒரே இடத்தில் நிற்க முடியாது. சமீபகாலமாக சில நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதும் ஸ்டிக் வைத்து தான் டிடி நடந்து வருகிறார்.

இந்த நிலையில், டிடிக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனையால் 10 ஆண்டுக்கு மேலாக வலியால் அவதிப்பட்டு வருவதாக கண்ணீருடன் பேசி உள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

எனக்கு இந்த பிரச்சனை ஆரம்பித்தது 2013ல். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டது. இந்த பத்து வருடத்தில் வலியில்லாத நாட்களே இல்லை. நான் இந்த பத்து வருடத்தில் பத்து நாட்கள் கூட வலி இல்லாமல் தூங்கி இருக்க மாட்டேன். தினமும் வலி மட்டும் தான் மிஞ்சி இருந்தது. வலியோடு தான் வாழ்க்கையை நகர்த்தி வருகிறேன்.

இருந்தாலும் எனக்கு டிராவல் பண்ணுவது பிடிக்கும். வீல்சேரில் பல நாடுகளுக்கு செல்கின்றேன். ஆனால் சென்னையில் நான் டிராவல் செய்யாததற்கு காரணம் வீல்சேரில் இருந்து சாலையில் செல்ல முடியாது என்பதால் தான். அதை நினைக்கும் போது தான் மனசு கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதேவேளை, விஜய் டிவியில் இப்போது பிரியங்கா, ரக்சன், மாகாபா போன்ற தொகுப்பாளர்கள் தான் பணியாற்றி வருகிறார்கள். டிடி எப்போது மீண்டும் பழைய பொலிவுடன் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...