1 scaled
சினிமாசெய்திகள்

இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்: தீவிரமடையும் போர் நடவடிக்கை

Share

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீரென ராக்கெட் தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 3 மாதங்களை நிறைவு செய்ய உள்ளது.

ஹமாஸ் படைகளை முற்றிலுமாக அழிக்கும் நோக்கில் இஸ்ரேலிய ராணுவ படை பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதுவரை இந்த போர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 21, 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காசாவில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீர் ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கிட்டத்தட்ட 20 ராக்கெட்டுகள் வீசப்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் தெரியவரவில்லை.

இதற்கிடையில் வடக்கு இஸ்ரேல் பகுதி நோக்கி ஈரான் ஆதரவு படையினர் ட்ரோன் தாக்குதலை நடத்தினர்.

இதனை இஸ்ரேலிய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இஸ்ரேல் மீதான இந்த தாக்குதலின் மூலம் போர் நடவடிக்கையானது உச்சக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...