tamilni 36 scaled
சினிமாசெய்திகள்

காதலியுடன் சேர்ந்து பெற்ற மகள் உடலில் பாதரசத்தை செலுத்திய ஜேர்மானியர்

Share

காதலியுடன் சேர்ந்து பெற்ற மகள் உடலில் பாதரசத்தை செலுத்திய ஜேர்மானியர்

மனைவி விட்டு விட்டுச் சென்ற ஆத்திரத்தில், மகள் உடலில் பாதரசத்தை ஊசி மூலம் செலுத்திய ஜேர்மானியர் ஒருவருக்கும் அவரது காதலிக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியிலுள்ள Springe என்னுமிடத்தைச் சேர்ந்த ஒரு 30 வயது நபர், ஒரு வயதே ஆன தனது மகள் உடலில், ஊசி மூலம் பாதரசத்தை ஏற்றியுள்ளார்.

அந்தக் குழந்தை பிறந்ததும் அதன் தாய் தன்னைப் பிரிந்து சென்றதால், அந்தப் பெண்ணைப் பழிவாங்க, அந்தப் பிஞ்சுக் குழந்தை உடலில் பாதரசத்தை ஏற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.

உடல் முழுவதும் கொப்புளங்களுடன் அந்தக் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவளுக்கு என்ன பிரச்சினை என மருத்துவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லையாம்.

மூன்று அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகே, அவளது உடலில் பாதரசம் ஏற்றப்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

குழந்தை உடலில் பாதரசத்தை ஏற்றியதை முதலில் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், பின்னர் அந்த நபரும், அவரது புதுக்காதலியான 34 வயது பெண்ணொருவரும், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

பாதரசத்தை ஏற்றுவதால் உடனடியாக உயிர் போகாது என்பது தங்களுக்குத் தெரியும் என்றும், அந்தக் குழந்தைக்கு மரண வலியை ஏற்படுத்தவே தாங்கள் அப்படிச் செய்ததாகவும் இருவரும் பின்னர் விசாரணையில் தெரிவித்துள்ளார்கள்.

அந்தக் குழந்தையின் தந்தைக்கு 13 ஆண்டுகளும், அவரது காதலிக்கு 12 ஆண்டுகளும் சிறைந்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...