tamilni 101 scaled
சினிமாசெய்திகள்

நயன்தாரா ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேன்.. வருத்தப்படும் கெளதம் கார்த்திக்

Share

நயன்தாரா ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேன்.. வருத்தப்படும் கெளதம் கார்த்திக்

கடந்த 2015 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த படத்தில் தனக்கு அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் அந்த வாய்ப்பை தான் மிஸ் செய்து விட்டதாகவும் நடிகர் கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த ’நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் முதலில் நாயகனாக நடிக்க கௌதம் கார்த்திக் தான் கமிட்டாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் தான் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’வை ராஜா வை’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து இரண்டில் எதை தேர்வு செய்யலாம் என்றபோது தான் ’வை ராஜா வை’ படத்தை தேர்வு செய்ததாகவும் ’நானும் ரவுடிதான்’ படத்தை தான் மிஸ் செய்து விட்டதாகவும் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் அந்த படம் வெளியாகி தான் தியேட்டரில் பார்த்தபோது அந்த படத்துக்கு விஜய் சேதுபதி தான் பொருத்தமாக இருப்பார் என்பதை புரிந்து கொண்டு அவருக்கு தான் வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் கூறினார். அதன் பிறகு நயன்தாராவுடன் நடிக்க இன்று வரை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் இனிமேல் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அதை பயன்படுத்திக் கொள்வேன் என்றும் அவர் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பின் போது தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே காதல் அரும்பியது என்பதும் அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...