tamilni 72 scaled
சினிமாசெய்திகள்

நடிகை ஶ்ரீதேவி மரண விவகாரத்தில் சிக்கிய பெண் பிரபலம்: சிபிஐ கூறும் காரணங்கள் தெரியுமா?

Share

நடிகை ஶ்ரீதேவி மரண விவகாரத்தில் சிக்கிய பெண் பிரபலம்: சிபிஐ கூறும் காரணங்கள் தெரியுமா?

நடிகை ஶ்ரீதேவி மரணம் தொடர்பாக யூடியூப்பர் ஒருவரின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு துபாயில் உள்ள ஹோட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்த நிலையில் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகை ஶ்ரீதேவியின் மரணத்தில் எந்தவொரு மர்மமும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இருப்பினும், நடிகை ஶ்ரீதேவி மரணம் குறித்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தை சேர்ந்த தீப்தி ஆர். பின்னிதி என்ற பெண் யூடியூபர் சர்ச்சையான பல தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

அந்த வகையில் யூடியூபர் பின்னிதி(youtuber pinniti) இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் கடிதங்கள் என சில ஆவணங்களை அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து அவர் வெளியிட்ட கடிதம் உண்மைதானா என்பதை ஆராயும் விதமாக ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் யூடியூபர் பின்னிதி வெளியிட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் கடிதங்கள் என கூறி போலியானவற்றை பகிர்ந்தது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் போலி ஆவணங்களை பகிர்ந்தது ஆகிய குற்றத்திற்காக யூடியூபர் பின்னிதி மற்றும் அவரது வழக்கறிஞர் பரத் சுரேஷ் காமத் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் தங்கள் தரப்பு வாதத்தை சிபிஐ பதிவு செய்யாமல் வழக்கு போடப்பட்டு இருப்பதாக யூடியூபர் பின்னிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...