பளார் விட்டு கதிரிடம் குணசேகரன் கூறிய விஷயம், தர்ஷன் நிலைமை?.. எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பு புரொமோ

Untitled 1 Recovered Recovered 1

சன் தொலைக்காட்சியில் கோலங்கள் என்ற வெற்றிகரமான தொடரை இயக்கி மக்களால் கவனிக்கப்பட்ட பிரபலமாக மாறியவர் திருச்செல்வம்.

அவரது இயக்கத்தில் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல்.

முதல் பாகம் முடிவடைந்து தற்போது 2வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. 60ம் கல்யாணம், தாரா நிகழ்ச்சி என இரண்டிலும் பெண்கள் ஜெயித்து குணசேகரனை தோற்க்கடித்தார்கள்.

இப்போது குணசேகரன், தர்ஷனின் திருமணத்தில் மிகவும் மும்முரமாக உள்ளார்.

தர்ஷன் திருமண பத்திரிக்கை எல்லாம் தயாராகி இருக்கிறது. அதைப்பார்த்த தர்ஷன் எனக்கு திருமணம் வேண்டாம் படிக்கப்போகிறேன் என கூறுகிறார். இதனால் பிரச்சனை பெரிய அளவில் வெடிக்கிறது.

இன்றைய எபிசோட் புரொமோவில், குணசேகரன் தர்ஷனை அடித்துவிட்டு இவனை என்ன வேண்டுமானாலும் செய் ஆனால் திருமணத்திற்கு தயாராக வேண்டும் என கூறுகிறார்.

ஆனால் ஈஸ்வரி தர்ஷனுக்கு துணையாக கதிரிடம் சண்டை போடுகிறார்.

Exit mobile version