tamilni 387 scaled
சினிமாசெய்திகள்

போதும் டார்ச்சர்.. இனி நிம்மதியா வாழலாம்.. விஜய்யை போலவே அஜித்தும் சினிமாவை விட்டு போகிறாரா?

Share

லைக்கா நிறுவனம் அஜித்தை வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கனவில் இருந்த நிலையில் அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது. ஆனால் அஜித், லைக்கா நிறுவனத்தின் படத்தை ஏன் ஒப்புக் கொண்டோம் என்று புலம்பும் அளவுக்கு லைக்கா நிறுவனம் நடந்து கொண்டதாக தெரிகிறது.

‘விடாமுயற்சி’ படத்தின் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் எந்தவித அப்டேட்டையும் ரசிகர்களுக்கு கொடுக்காமல் இருப்பது, படப்பிடிப்பையும் ஒழுங்காக நடத்தாமல் இருப்பது, திடீர் திடீர் என படப்பிடிப்பை ரத்து செய்வது ஆகியவை அஜித்தை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எப்படியாவது இந்த படத்தை முடித்துவிட்டு இனி லைக்கா பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அஜித் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக சமீபத்தில் மார்ச் 15ஆம் தேதி முதல் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று அனைவரிடம் கூறிவிட்டு திடீர் என சில காரணங்களால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் இன்னும் ஒரு மாதம் கழித்து தான் படப்பிடிப்பு நடைபெறும் என்று லைக்கா தரப்பிலிருந்து கூறியிருப்பது அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனால் வெறுத்துப்போன அஜித் இனி சினிமா பக்கமே வேண்டாம் என்றும், ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை முடித்துவிட்டு பேசாமல் துபாயில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே தனது போட்டியாளர் விஜய் இன்னும் ஒரு படத்தில் நடித்துவிட்டு திரையுலகில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதால் சின்னச்சின்ன பசங்களுடன் தான் மோத வேண்டாம் என்று முடிவெடுத்த அஜித் கூடிய விரைவில் திரை உலகில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் அஜித் விரைவில் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்ய போவதாகவும், தனக்கு பிடித்த நிம்மதியான வாழ்க்கையை தொடர இருப்பதாகவும் குறிப்பாக அவர் துபாயில் செட்டில் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...