tamilni 387 scaled
சினிமாசெய்திகள்

போதும் டார்ச்சர்.. இனி நிம்மதியா வாழலாம்.. விஜய்யை போலவே அஜித்தும் சினிமாவை விட்டு போகிறாரா?

Share

லைக்கா நிறுவனம் அஜித்தை வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கனவில் இருந்த நிலையில் அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது. ஆனால் அஜித், லைக்கா நிறுவனத்தின் படத்தை ஏன் ஒப்புக் கொண்டோம் என்று புலம்பும் அளவுக்கு லைக்கா நிறுவனம் நடந்து கொண்டதாக தெரிகிறது.

‘விடாமுயற்சி’ படத்தின் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் எந்தவித அப்டேட்டையும் ரசிகர்களுக்கு கொடுக்காமல் இருப்பது, படப்பிடிப்பையும் ஒழுங்காக நடத்தாமல் இருப்பது, திடீர் திடீர் என படப்பிடிப்பை ரத்து செய்வது ஆகியவை அஜித்தை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எப்படியாவது இந்த படத்தை முடித்துவிட்டு இனி லைக்கா பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அஜித் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக சமீபத்தில் மார்ச் 15ஆம் தேதி முதல் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று அனைவரிடம் கூறிவிட்டு திடீர் என சில காரணங்களால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் இன்னும் ஒரு மாதம் கழித்து தான் படப்பிடிப்பு நடைபெறும் என்று லைக்கா தரப்பிலிருந்து கூறியிருப்பது அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனால் வெறுத்துப்போன அஜித் இனி சினிமா பக்கமே வேண்டாம் என்றும், ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை முடித்துவிட்டு பேசாமல் துபாயில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே தனது போட்டியாளர் விஜய் இன்னும் ஒரு படத்தில் நடித்துவிட்டு திரையுலகில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதால் சின்னச்சின்ன பசங்களுடன் தான் மோத வேண்டாம் என்று முடிவெடுத்த அஜித் கூடிய விரைவில் திரை உலகில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் அஜித் விரைவில் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்ய போவதாகவும், தனக்கு பிடித்த நிம்மதியான வாழ்க்கையை தொடர இருப்பதாகவும் குறிப்பாக அவர் துபாயில் செட்டில் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...