பரபரப்பாக நடைபெற்று வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ன் இறுதிப்போட்டி இன்று கோலாகலமாக நிறைவடைந்தது. இதில் நான்கு இறுதிப் போட்டியாளர்களுக்கு இடையே நடைபெற்ற கடும் போட்டியில், அதிக வாக்குகளைப் பெற்று திவ்யா கணேஷ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்து, இறுதிவரை முன்னேறி டைட்டில் வெல்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அதனைத் தகர்த்து திவ்யா கணேஷ் இம்முறை சாதித்துக் காட்டியுள்ளார்.
ஆரம்பம் முதலே தனது நேர்மையான ஆட்டத்தால் ரசிகர்களைக் கவர்ந்த திவ்யா, இறுதி வாரத்தில் மற்ற மூவரையும் விடப் பெருமளவிலான வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தார்.
வெற்றி வாகை சூடிய திவ்யா கணேஷுக்குப் பிரம்மாண்டமான பரிசுகள் வழங்கப்பட்டன.
50 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஸ்பான்சரான மாருதி சுசுகி நிறுவனம், தனது லேட்டஸ்ட் கார் மாடல் ஒன்றைத் திவ்யாவுக்குப் பரிசாக வழங்கியது. பிக் பாஸ் சீசன் 9-ன் பிரத்யேகக் கோப்பையையும் அவர் தட்டிச் சென்றார்.
சமூக வலைத்தளங்களில் திவ்யா கணேஷின் வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் ஜெயித்தது இதுவே முதல்முறை என்பதால், இந்த சீசன் பிக் பாஸ் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.