6 32
சினிமா

96 இரண்டாம் பாகம்.. மனம் திறந்து பேசிய இயக்குனர் பிரேம் குமார்

Share

96 இரண்டாம் பாகம்.. மனம் திறந்து பேசிய இயக்குனர் பிரேம் குமார்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்து கடந்த 2018 வெளிவந்த திரைப்படம் 96. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரேம் குமார் இயக்கியிருந்தார்.

காதலை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. நடிகை திரிஷாவின் கேரியரில் இப்படமா கம் பேக் ஆக அமைந்தது.

96 படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெய்யழகன். இப்படத்தில் கார்த்தி, அரவிந்த் இணைந்து நடித்துள்ளனர். மேலும் ராஜ்கிரண், ஸ்ரீவித்யா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் பிரேம் குமார், 96 இரண்டாம் பாகம் குறித்து மனம்திறந்தார்.

இதில், 96 படத்தின் இரண்டாம் பாகம் காதல் கதை கிடையாது. அது முழுக்க முழுக்க குடும்ப கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது” என கூறியுள்ளார். இதன்மூலம் 96 படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்த ரசிகர்ளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குனர் பிரேம் குமார்.

Share

Recent Posts

தொடர்புடையது
cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...

image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...