சினிமாசெய்திகள்

பிரித்தானியாவுக்கு ஆபத்து! வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

Share

பிரித்தானியாவுக்கு ஆபத்து! வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

புயல் தொடர்பில், வானிலை ஆராய்ச்சி மையம், பிரித்தானியாவுக்கு ஆபத்து எச்சரிக்கை உட்பட பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

நேற்றிரவு, ஆண்டனி புயல் என பெயரிடப்பட்டுள்ள புயல் பிரித்தானியாவைத் தாக்கியது. இன்றும், அதன் தாக்கத்தால் பலத்த காற்றும் கன மழையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வேல்ஸ் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் ஆம்பர் எச்சரிக்கைகள் விடுத்துள்ளது.

வட அயர்லாந்து மிக கன மழையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட அயர்லாந்துக்கு மழை தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தென்மேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு காற்று தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 65 கிலோமீற்றர் வேகம் வரையில் பலத்த காற்று வீசலாம் என்றும், காற்றில் பறக்கும் பொருட்களால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...