24 6662c71b36c38
சினிமாசெய்திகள்

கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவித்த சேரன்!! என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

Share

கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவித்த சேரன்!! என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், தற்போது அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார் சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக மந்தி தொகுதியில் களமிறங்கி 74755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் கண்டார்.

நேற்று கங்கனா, சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அப்போது குல்விந்தர் கவுர் என்ற (CISF) பெண் காவலர் ஒருவர் கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார். உடனே, இது பற்றி கங்கனா ரனாவத் வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியிருந்தார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கங்கனா ரனாவத் கூறியிருந்தார். அதனால் தான் அவரை அறைந்தேன் என்று விசாரணையில் குல்விந்தர் கவுர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பிரபல இயக்குனர் சேரன், “இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன்.. அந்த அடி நடிகைக்காகனதல்ல. வாக்களித்த மக்களுக்கானது.. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால்.. மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off..” என்று பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...