8 4
சினிமாசெய்திகள்

வலுக்கும் முறுகல் நிலை – மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா

Share

வலுக்கும் முறுகல் நிலை – மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா

இணைய அச்சுறுத்தல் “எதிரிகள்” என்று கருதப்படும் நாடுகளின் பட்டியலில் கனடா (Canada) முதன்முறையாக இந்தியாவின் (India) பெயரை வெளியிட்டுள்ளது.

கனடா தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கையை அந்நாட்டின் இணையப் பாதுகாப்பிற்கான தேசிய தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ளது.

தங்கள் நாட்டின் இணைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எதிரி நாடுகளின் பெயர்கள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன. சீனா, ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு ஐந்தாவது நாடாக இந்தியாவின் பெயரை சேர்த்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிற்கும், கனடாவிற்கும் மோதல் முற்றி வரும் நிலையில், முதல் முறையாக இந்தியாவை இணைய அச்சுறுத்தல் எதிரி நாடாக சேர்த்தது இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு இந்திய அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களை சந்திக்கையில், “இந்தியாவுக்கு எதிரான உலகளாவிய கருத்தை உருவாக்குவதற்காக இது போன்று வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

எந்த ஆதாரமும் இல்லாமல் இத்தகைய குற்றச்சாட்டை கனடா எழுப்புகிறது” என்று தெரிவித்தார். ஏற்கெனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு உதவியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

எனினும் இதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் கனடா அரசு வழங்காத நிலையில் கடந்த ஓராண்டாக இந்தியா – கனடா இடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை, மிரட்டல், உளவுத் தகவல் சேகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக கனடா அமைச்சர் டேவிட் மோரிசன் கடந்த 29ஆம் திகதி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை அபத்தமானது, ஆதாரமற்றது என்று மறுப்பு தெரிவித்துள்ள இந்திய அரசு, இந்த விஷயத்தில் கனடா தரப்பின் விளக்கத்தை தெரிவிக்குமாறு அந்நாட்டு தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...

02 25
செய்திகள்உலகம்

எண்ணெய் விலை உயர்வு: அமெரிக்காவின் கையிருப்பு ஒரு ‘உளவியல் தாக்கம்’ மட்டுமே

ஈரான் மீதான போரின் தாக்கம் மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தை குறித்து, ‘குளோபல் எகனாமிக் அட்வைசர்ஸ்’...