THUM
சினிமாசெய்திகள்

பிக் பாஸ்ஸை விட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்னவின் ஒரு நாள் சம்பளம்.. அடேங்கப்பா இவ்வளவா

Share

பிக் பாஸ்ஸை விட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்னவின் ஒரு நாள் சம்பளம்.. அடேங்கப்பா இவ்வளவா

மிகவும் விறுவிறுப்பாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசனில் பல ட்விஸ்ட் இருப்பதை வாரம் வாரம் நம்மால் காண முடிகிறது.

பிக் பாஸ் சீசன் 8ல் இரண்டாவது வார எலிமினேஷனில் வெளியேறப்போவது யார் என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று அர்னவ் வெளியேற்றப்பட்டார்.

அர்னவ் எலிமினேஷன் செய்யப்பட்டார் என விஜய் சேதுபதி அறிவித்ததும் சக போட்டியாளரான அன்ஷிதா அர்னவை கட்டிப்பிடித்து கொண்டு நீண்ட நேரம் கதறி அழுதார்.

மிகவும் கோபத்துடன் பிக் பாஸ் டிராபியை உடைத்துவிட்டு வெளியே வந்த அர்னவ் பெண்கள் டீமை பாராட்டியும், ஆண்கள் டீமை பார்த்து ஜால்ரா அடிப்பவர்கள் என்றும் கோபத்துடன் அவர்களை திட்டி பேச ஆரம்பித்தார்.

வன்மத்தை கொட்டும் வகையில் அர்னவ் பேசியதால் கடுப்பான விஜய் சேதுபதி “இது அநாகரிக பேச்சு. இந்த இடத்தில் இவ்வாறு பேச கூடாது” என்று அர்னவை எச்சரிக்கை செய்து வெளியே அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வீட்டில் இருந்த அர்னவ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஒரு நாளைக்கு ரூ. 20 முதல் ரூ. 25 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டதாகவும், மொத்தம் 14 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்காக, ரூ.2.8 – ரூ.3.5 லட்சம் வரை அவருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...

25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...