8 2 scaled
சினிமாசெய்திகள்

தாலி கட்டும் விஷயத்தில் அசோக் செல்வனுக்கு கீர்த்தி பாண்டியன் போட்ட கட்டளை

Share

தாலி கட்டும் விஷயத்தில் அசோக் செல்வனுக்கு கீர்த்தி பாண்டியன் போட்ட கட்டளை

சினிமா பிரபலங்களில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் பலர் உள்ளார்கள், அப்படி அண்மையில் திருமணம் செய்து ஜோடி அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன்.

ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகனாக வெற்றி கண்ட அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் போர் தொழில்.

ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் தற்போது அசோக் செல்வன் நடிக்கிறார், பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி பாண்டியன் நாயகியாக நடித்திருக்கிறார்.

கடந்த செப்டம்பர் 13ம் தேதி அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலி அருகே உள்ள பண்ணையில் நடைபெற்று வருகிறது. இவர்களுடைய திருமணம் தமிழர் திருமண மரபு படி நடைபெற்றிருக்கிறது.

சமீபத்தில் தான் இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் இருவரும் பேட்டி ஒன்று கொடுத்துள்ளனர்.

கீர்த்தி பாண்டியன் பேசும்போது, எனக்கு தாலி கட்டும்போது 3 முடிச்சியும் நீயே போட வேண்டும் என்று அசோக் செல்வனிடம் நான் கட்டளை போட்டிருந்தேன்.

அதேபோல் தான் அவரே எனக்கு 3 முடிச்சு போட்டார், தமிழ் மரபு முறைப்படி எங்கள் திருமணம் நடந்தது என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...