9 36
சினிமாசெய்திகள்

அரண்மனை 5 குறித்து வெளிவந்த தகவல் பொய்யானது.. நடிகை குஷ்பு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு

Share

அரண்மனை 5 குறித்து வெளிவந்த தகவல் பொய்யானது.. நடிகை குஷ்பு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு

சுந்தர் சி இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் அரண்மனை 4 இப்படத்தில் இவருடன் இணைந்து தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடித்திருந்தனர்.

2024 – ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ரூ. 100 கோடி வசூல் செய்த முதல் படமாக அரண்மனை 4 அமைந்தது. அரண்மனை படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தாலே, ரசிகர்கள் வைக்கும் ஒரே விமர்சனம், படம் ஒரே மாதிரி இருக்கிறது என்று தான்.

அதனால் அரண்மனை 4 – ம் பாகத்தில் வழக்கமான கதைக்களத்தை வைத்து திரைக்கதையை அமைக்காமல், வித்தியாசமாக இப்படத்தை சுந்தர் சி கையாண்டார்.

அதனால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அரண்மனை 4 படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்த படத்தின் 5 – ம் பாகம் எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று அரண்மனை 5 குறித்து ஒரு தகவல் வெளியானது. அதாவது, அரண்மனை 5 படத்திற்கான வேலைகள் துவங்கிவிட்டதாகவும், அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளிவரும் என்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார் எனவும் தகவல் வெளியானது.

தற்போது, அரண்மனை 5 குறித்து வெளியான தகவல் பொய்யானது என கூறி நடிகை குஷ்பு சுந்தர் அவரது இன்ஸ்டா பக்கதில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “அரண்மனை 5 படம் குறித்து பொய்யான தகவல் பரவி வருகிறது அதிகாரப்பூர்வ தகவல் இயக்குனர் மூலம் அல்லது தயாரிப்பாளர் மூலம் தான் வெளிவரும் அதுவரை சற்று பொறுமையாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...