1 eree
சினிமாசெய்திகள்

சூர்யா 45ல் இருந்து விலகிய ஏ.ஆர். ரஹ்மான்.. ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன காரணம்

Share

சூர்யா 45ல் இருந்து விலகிய ஏ.ஆர். ரஹ்மான்.. ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன காரணம்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யா, புதிதாக கமிட் செய்திருக்கும் படம் சூர்யா 45. நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து, படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தில் த்ரிஷா, லப்பர் பந்து கதாநாயகி ஸ்வாசிகா, காளி வெங்கட், காஷ்மீரா ஆகியோர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

ரஹ்மான் – ஆர்.ஜே. பாலாஜி – சூர்யா கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஜி.கே. விஷ்ணு கமிட் செய்யப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

வெளிவந்த அறிவிப்பு போஸ்டரில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் இடம்பெறவில்லை. அதற்கு முன் வந்த அனைத்து போஸ்டர்களிலும் ரஹ்மானின் பெயர் இடம்பெற்று இருந்த நிலையில், இந்த போஸ்டரில் பெயர் இடம்பெறாமல் இருந்தது. இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திலிருந்து விலகிவிட்டார் என கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் தன் மனைவியுடன் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக தகவல் வெளிவந்த நிலையில், சினிமாவிலிருந்து ஓராண்டு ஓய்வு எடுக்கப்போவதாக கூறப்பட்டது.

அதற்காக தான் தற்போது இப்படத்திலிருந்து விலகி இருக்கிறாரா? அல்லது படக்குழுவுடன் வேறு ஏதேனும் பிரச்சனையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சூர்யா 45 படக்குழுவினர் விரைவில் விளக்கம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...