24 6725bd2861654
சினிமாசெய்திகள்

விஜய்யிடம் இருந்து வாங்கிய துப்பாக்கி.. லியோவை மிஞ்சிய அமரன்

Share

விஜய்யிடம் இருந்து வாங்கிய துப்பாக்கி.. லியோவை மிஞ்சிய அமரன்

கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்த கோட் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

அந்த காட்சியில் நடிகர் விஜய் தன் கையில் இருந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுத்துவிட்டு செல்வார். இதனால் சினிமாவில் தனது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துவிட்டு அரசியலுக்கு சென்றுவிட்டார் விஜய் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் செல்லும் இடமெல்லாம் துப்பாக்கியின் கணம் எப்படி இருக்கிறது, அடுத்த தளபதி நீங்கள் தானா என பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த அமரன் உலகளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி கொண்டு இருக்கிறது. இதுவரை உலகளவில் ரூ. 68 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் மலேசியாவில் விஜய்யின் கோட் படத்தை மிஞ்சியுள்ளது.

ஆம், மலேசியாவில் அமரன் வெளிவந்து இரண்டாம் நாளில் இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படத்திற்கு வந்திருந்த மக்கள் கூட்டம் வந்துள்ளது என சொல்லப்படுகிறது. கிட்டதட்ட 1.35 லட்சம் மக்கள் அமரன் படத்தை பார்க்க இரண்டாம் நாள் வந்துள்ளார்களாம்.

இதற்கு முன் இந்த சாதனையை லியோ படம் செய்திருந்த நிலையில், தற்போது லியோ, ஜெயிலர் என அனைத்து படங்களின் சாதனையையும் முறியடித்து புதிய சாதனையை அமரன் படைத்துள்ளது. மேலும் இது மலேசியாவில் இரண்டாம் நாளுக்கான விவரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...