24 66372a4589052
சினிமாசெய்திகள்

விஜய் படத்தை ரகசியமாக பார்த்த அஜித்.. விழுந்து விழுந்து சிரித்தார்.. பிரபல இயக்குனர் கூறிய தகவல்

Share

விஜய் படத்தை ரகசியமாக பார்த்த அஜித்.. விழுந்து விழுந்து சிரித்தார்.. பிரபல இயக்குனர் கூறிய தகவல்

நடிகர் அஜித் தற்போது திரையுலகின் உச்சத்தில் இருக்கிறார். இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் படப்பிடிப்பு நடைபெற்று வர, அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படத்தை கமிட் செய்துள்ளார்.

இப்படத்திற்காக ரூ. 160 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் என கூறப்படுகிறது. அதே போல் இதற்கு அடுத்ததாக இவர் நடிக்கப்போகும் படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் கேட்கவுள்ளார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

நடிகர் அஜித்தின் திரைப்படங்களும், விஜய்யின் திரைப்படங்களும் இதுவரை பல முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதே போல் அவர்களுடைய ரசிகர்கள் மத்தியிலும் மோதல் இருக்கிறது. அப்படி இருந்தாலும் கூட அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஒரு முறை விஜய்யின் வில்லு படத்தை பார்க்க ரகசியமாக சென்றுள்ளார் அஜித். அங்கிருக்கும் ரசிகர்களுக்கு தெரிந்துவிட கூட என எண்ணி இப்படி செய்துள்ளார். அஜித்துடன் இயக்குனர் சரண் சென்றுள்ளார். அப்படத்தை அவர் ரசித்து பார்த்தாராம்.

அதே போல் சரணும் அஜித்தும் இணைந்து சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ் படம் பார்த்துள்ளனர். அப்படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாராம் அஜித். இந்த தகவலை இயக்குனர் சரண் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...