10 4
சினிமாசெய்திகள்

தொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி?.. நடிகை தமன்னா வருத்தம்

Share

தொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி?.. நடிகை தமன்னா வருத்தம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அயன், பையா, வீரம், சுறா, தேவி, அரண்மனை– 4,ஜெயிலர் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.

20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து, இன்றும் பல இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். நடிப்பில் மட்டுமின்றி நடனத்திலும் புகழ் பெற்று வருகிறார்.

தமன்னா ஜெயிலர் படத்தில் ‘காவாலயா’ பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்து வசூலில் சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான பாலிவுட் படமான ‘ஸ்த்ரி 2’ படத்திலும் இவர் நடனமாடிய ஆஜ் கிராத் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது.

இவர் நடனமாடும் படங்கள் தொடர்ந்து வசூலில் வெற்றி பெற்று வருவதால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என அனைவரும் தமன்னாவை அவர்கள் படத்திற்காக ஆட அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

இதனால் சற்று வருத்தமடைந்த தமன்னா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ” நான் ஆடிய ஓரு பாடல் அந்த படத்தின் வெற்றிக்கு உதவி செய்தால் அது எனக்கு மகிழ்ச்சிதான்.

ரஜினி படம் என்பதால் தான் ஜெயிலர் படத்தில் ஆடினேன். ‘ஸ்த்ரி 2’ படத்தின் இயக்குனர் எனது நண்பர் என்பதால் அந்த படத்திலும் ஆடினேன். அதற்காக நான் குத்தாட்ட நடிகை என்ற ரீதியில் தொடர்ந்து அதுபோல் ஆட சொன்னால் எப்படி?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...