24 66006dc9c511b
சினிமாசெய்திகள்

சினிமா, அரசியல் என கெத்தாக கலக்கும் நடிகை கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு…. அவரே வெளியிட்ட விவரம்

Share

சினிமா, அரசியல் என கெத்தாக கலக்கும் நடிகை கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு…. அவரே வெளியிட்ட விவரம்

முன்னணி நடிகர்களுடன் படம் நடித்தால் தான் பிரபலம் ஆக முடியும் என்ற எண்ணத்தை உடைத்து தனியாக படங்கள் நடித்தாலும் உயர முடியும் என்பதை நிரூபித்துள்ளவர் நடிகை கங்கனா ரனாவத்.

தமிழில் தாம்தூம் படத்தின் மூலம் அறிமுகமானவர் கடந்த 2021ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த தலைவி படம் மூலம் கம்பேக் கொடுத்தார்.

அப்படத்தில் ஜெயலலிதாவாக நடித்தவர் கடந்தாண்டு வெளிவந்த சந்திரமுகி படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்தார். இப்போது அவர் அரசியலிலும் ஈடுபட்டு கலக்கி வருகிறார்.

தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பாஜன சார்பில் போட்டியிடுகிறார். ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜன வேட்பாளராக கங்கனா ரனாவத் களமிறக்கப்பட்டு இருக்கிறார், அதற்காக அண்மையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர், ரூ. 90 கோடிக்கு மேல் சொத்துள்ளக் இருப்பதாகவும், ரூ. 28 கோடி அசையும் சொத்துக்களும் ரூ. 62 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் கையில் ரூ. 2 லட்சமும், வங்கிக் கணக்கில் ரூ. 1 கோடி 35 லட்சமும் உள்ளதாம். இதுதவிர 6.5 கிலோ தங்கம், 60 கிலோ வெள்ளி 3 கோடி மதிப்புள்ள 14 கேரட் வைர நகைகள் உள்ளதாம்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....