11 4
சினிமாசெய்திகள்

இந்த ஒரு படம் போதும்!! நடிகை அபர்ணாவிடம் கெஞ்சி கேட்டுக் கொண்ட தந்தை.. எதற்கு தெரியுமா

Share

இந்த ஒரு படம் போதும்!! நடிகை அபர்ணாவிடம் கெஞ்சி கேட்டுக் கொண்ட தந்தை.. எதற்கு தெரியுமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் அபர்ணா பாலமுரளி. இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும், 2017 -ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதன் பின் இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.

இப்படத்தில் அபர்ணா சிறப்பாக நடித்திருந்ததால் இவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதை தொடர்ந்து, சமீபத்தில் இவர் நடிகர் தனுஷ் இயக்கிய ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அபர்ணா ‘ருத்ரம்’ என்ற படத்தில் நடித்துள்ளார் இப்படம் வரும் டிசம்பர் 13ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில், முதல் முறையாக ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய அபர்ணா சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ” ருத்ரம் படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நான் நடித்ததால் பல முன் பயிற்சிகளை எடுத்து கொண்டேன்.

அந்த காட்சிகளை வீட்டில் ரிகர்சல் செய்து பார்ப்பதற்கு என் அப்பாவை பயன்படுத்தி கொண்டேன். இப்படி ஒரு தந்தை கிடைத்தது வசதியாக போய்விட்டது.

மேலும், என் தந்தை என்னிடம் இந்த ஒரு ஆக்சன் படம் மட்டும் போதும், இனிமேல் வேறு எந்த ஆக்சன் படங்களையும் தயவு செய்து ஒப்புக்கொள்ளாதே என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்” என்று சிரிப்புடன் பகிர்ந்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

MediaFile 3 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகை கீர்த்தி சுரேஷ் யுனிசெஃப் இந்தியாவின் தூதராக நியமனம்: “குழந்தைகள் தான் நம் எதிர்கால நம்பிக்கை”

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் கீர்த்தி சுரேஷ்,...