dhanush son
சினிமாசெய்திகள்

என்னது தனுஷ் மகன் யாத்ராவின் +2 மார்க் இதுவா?- வைரலாகும் மதிப்பெண் விவரம்

Share

என்னது தனுஷ் மகன் யாத்ராவின் +2 மார்க் இதுவா?- வைரலாகும் மதிப்பெண் விவரம்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பல மோசமான விமர்சனங்களை தாண்டி இப்போது சிறந்த நாயகனாக வளர்ந்து இருக்கிறார்.

இவர் நடிப்பு என்பதை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் கேப்டன் மில்லர் படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் சரியான வரவேற்பு பெறவில்லை.

இதற்கு இடையில் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம் அதிகமாக பேசப்பட்டு வந்தது.

அதேபோல் ஐஸ்வர்யா தற்போது புதிய வீடு ஒன்றை வாங்கி இருக்கும் செய்தியும் உலா வந்தது.

நேற்று தமிழகம் முழுவதும் 12வது வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.

இதில் சூர்யா-ஜோதிகா மகள் தியாவும் 12ம் வகுப்பு தான் என ஒரு விவரம் வெளியானது, ஆனால் அது பொய் தகவல் என நாமே அறிவித்திருந்தோம்.

இந்த நிலையில் நடிகர் தனுஷின் மகன் யாத்ராவும் 12ம் வகுப்பு தான், அவரது மதிப்பெண் இது என ஒரு தகவல் வலம் வருகிறது.

மொழிப்பாடத்தில் 98 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 92, கணக்கு 99, பிசிக்ஸ் 91, கேமிஸ்ட்ரி 92, பயாலஜியில் 97 மதிப்பெண் பெற்று 600க்கு 569 மதிப்பெண் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...