4 7 scaled
சினிமாசெய்திகள்

விடா முயற்சி சூட்டிங் ஸ்பாட்டில் திடீரென உயிரிழந்த இயக்குநர் – அதிர்ச்சியில் திரையுலகம்

Share

விடா முயற்சி சூட்டிங் ஸ்பாட்டில் திடீரென உயிரிழந்த இயக்குநர் – அதிர்ச்சியில் திரையுலகம்

இயக்குநரும், நடிகருமான மகிழ்திருமேனி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘விடாமுயற்சி’. இதில் அஜித் குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார்.இவருடன் த்ரிஷா, ஆரவ், பொலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ரெஜினா கசான்ட்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.‌

இந்தத் திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பானது இந்த மாதத்தில் தொடங்கி அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

இதற்காக படத்தின் இயக்குநர் மகில் திருமேனி, நடிகர் அஜித் மற்றும் கலை இயக்குநர் மிளன் என மிக முக்கியமானவர்கள் மட்டும் சென்றனர்.இன்றைய படப்பிடிப்பு இன்று காலை தொடங்கிய போது சூட்டிங் ஸ்பாட் பணியில் ஈடுபட்டபோது திடீரென கலை இயக்குநர் மிளன் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மிலன் உயிரிழந்துள்ளார்.

அஜித்தின் ஃபேவரிட் கலை இயக்குநர் என கருதப்படுபவர் மிளன். இந்த தகவலானது தற்போது தமிழ் சினிமாவை மிகவும் துயரத்தை ஆழ்த்தி இருக்கின்றது.அத்தோடு படப்பிடிப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...