4 7 scaled
சினிமாசெய்திகள்

விடா முயற்சி சூட்டிங் ஸ்பாட்டில் திடீரென உயிரிழந்த இயக்குநர் – அதிர்ச்சியில் திரையுலகம்

Share

விடா முயற்சி சூட்டிங் ஸ்பாட்டில் திடீரென உயிரிழந்த இயக்குநர் – அதிர்ச்சியில் திரையுலகம்

இயக்குநரும், நடிகருமான மகிழ்திருமேனி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘விடாமுயற்சி’. இதில் அஜித் குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார்.இவருடன் த்ரிஷா, ஆரவ், பொலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ரெஜினா கசான்ட்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.‌

இந்தத் திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பானது இந்த மாதத்தில் தொடங்கி அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

இதற்காக படத்தின் இயக்குநர் மகில் திருமேனி, நடிகர் அஜித் மற்றும் கலை இயக்குநர் மிளன் என மிக முக்கியமானவர்கள் மட்டும் சென்றனர்.இன்றைய படப்பிடிப்பு இன்று காலை தொடங்கிய போது சூட்டிங் ஸ்பாட் பணியில் ஈடுபட்டபோது திடீரென கலை இயக்குநர் மிளன் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மிலன் உயிரிழந்துள்ளார்.

அஜித்தின் ஃபேவரிட் கலை இயக்குநர் என கருதப்படுபவர் மிளன். இந்த தகவலானது தற்போது தமிழ் சினிமாவை மிகவும் துயரத்தை ஆழ்த்தி இருக்கின்றது.அத்தோடு படப்பிடிப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...