4 50
சினிமாசெய்திகள்

கோமாளி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ஜெயம் ரவி இல்லையா..! வேறு யார் தெரியுமா

Share

கோமாளி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ஜெயம் ரவி இல்லையா..! வேறு யார் தெரியுமா

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் 2019ல் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி.

இப்படத்தை பிரபல இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். அறிமுக படத்திலேயே தனது வெற்றியை பதித்து, தனக்கென்று தனி இடத்தை பிடித்துக்கொண்டார். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருந்தார்.

மேலும் இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து காஜல் அகர்வால், சம்யுக்தா, யோகி பாபு, ஆர்.ஜே. ஆனந்தி என பலரும் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது ஜெயம் ரவி கிடையாதாம். ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் விருப்பப்பட்டு, அவரிடமும் கூறியுள்ளார். ஆனால், ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தை நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து காரணத்தை கூறிய ஆர்.ஜே. பாலாஜி, “இவ்வளவு பெரிய படத்தில் நான் ஹீரோவாக நடித்தால், கண்டிப்பாக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் நான் ஒரு படத்தில் கூட ஹீரோவாக நடிக்கவில்லை” என்றும், அதனால் தான் கோமாளி பட வாய்ப்பை நிராகரித்ததாகவும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...