8 4
சினிமாசெய்திகள்

வலுக்கும் முறுகல் நிலை – மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா

Share

வலுக்கும் முறுகல் நிலை – மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா

இணைய அச்சுறுத்தல் “எதிரிகள்” என்று கருதப்படும் நாடுகளின் பட்டியலில் கனடா (Canada) முதன்முறையாக இந்தியாவின் (India) பெயரை வெளியிட்டுள்ளது.

கனடா தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கையை அந்நாட்டின் இணையப் பாதுகாப்பிற்கான தேசிய தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ளது.

தங்கள் நாட்டின் இணைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எதிரி நாடுகளின் பெயர்கள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன. சீனா, ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு ஐந்தாவது நாடாக இந்தியாவின் பெயரை சேர்த்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிற்கும், கனடாவிற்கும் மோதல் முற்றி வரும் நிலையில், முதல் முறையாக இந்தியாவை இணைய அச்சுறுத்தல் எதிரி நாடாக சேர்த்தது இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு இந்திய அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களை சந்திக்கையில், “இந்தியாவுக்கு எதிரான உலகளாவிய கருத்தை உருவாக்குவதற்காக இது போன்று வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

எந்த ஆதாரமும் இல்லாமல் இத்தகைய குற்றச்சாட்டை கனடா எழுப்புகிறது” என்று தெரிவித்தார். ஏற்கெனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு உதவியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.

எனினும் இதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் கனடா அரசு வழங்காத நிலையில் கடந்த ஓராண்டாக இந்தியா – கனடா இடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை, மிரட்டல், உளவுத் தகவல் சேகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக கனடா அமைச்சர் டேவிட் மோரிசன் கடந்த 29ஆம் திகதி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை அபத்தமானது, ஆதாரமற்றது என்று மறுப்பு தெரிவித்துள்ள இந்திய அரசு, இந்த விஷயத்தில் கனடா தரப்பின் விளக்கத்தை தெரிவிக்குமாறு அந்நாட்டு தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...