சினிமாசெய்திகள்

மாநாட்டுக்கு பின் விஜய் பங்குபெறும் முதல் விழா.. வெளியான அதிரடி தகவல்

Share
24 6725dff279379
Share

மாநாட்டுக்கு பின் விஜய் பங்குபெறும் முதல் விழா.. வெளியான அதிரடி தகவல்

தமிழக அரசியல் களத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த களமிறங்கி இருக்கிறது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். அரசியலில் என்ட்ரி கொடுக்கப்போகிறேன் என்று கூறியதில் இருந்து ஒவ்வொரு விஷயமாக பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

முதலில் கட்சி பெயர், அடுத்து கொடி, கடைசியாக தனது கொள்கைகளை கூறியிருக்கிறார். கடந்த அக்டோபர் 27ம் தேதி அனைவரும் பிரம்மிக்கும் அளவிற்கு மாநாட்டையும் நடத்தி முடித்தார்.

தற்போது வரை அவரது கட்சி சார்பில் நடந்த முதல் மாநாடு பற்றிய பேச்சு தான் இப்போது தமிழகத்தில் அதிகம் பேசப்படுகிறது. இந்நிலையில், வரும் டிசம்பர் 6 – ஆம் தேதி தனியார் வார இதழ் புத்தக வெளியீட்டு விழா நடக்க உள்ளது.

இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இருவரும் ஒன்றாக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

அம்பேத்கர் நினைவு நாள் அன்று நடைபெறும் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் புத்தகத்தை வெளியிட விஜய் புத்தகத்தை பெற்றுக் கொள்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மாநாட்டுக்கு பின் விஜய் பங்குபெறும் முதல் விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...