24 669ba17808fda
சினிமா

பெண்களுக்கு திருமணம் தேவையில்லை.. பிரபல நடிகை சர்ச்சை பேச்சு!!

Share

பெண்களுக்கு திருமணம் தேவையில்லை.. பிரபல நடிகை சர்ச்சை பேச்சு!!

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பாமா. இவர் தமிழில் ‘எல்லாம் அவன் செயல்’ உட்பட சில படங்களில்நடித்துள்ளார்.

இவர் கடந்த 2020ம் ஆண்டு அருண் என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கவுரி என்ற மகள் இருக்கிறார்.

சமீபத்தில் பாமா, சில தனிப்பட்ட காரணத்தால் தனது கணவரை பிரிந்ததாக பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் பாமா திருமணம் பற்றி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சை கிளப்பி இருக்கிறது.

அது என்னவென்றால், “பெண்களாகிய நமக்கு திருமணம் தேவையா? வேண்டாம். தங்களுடைய பணத்தை கொடுத்து எந்த பெண்ணும் திருமணம் செய்ய கூடாது. உங்களுடைய பணத்தை பறித்து பறித்துக் கொண்டு தற்கொலைக்குத் தள்ளுவார்கள். மேலும் உங்களுடைய வாழ்க்கைக்குள் வருபவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரியாமல் திருமணம் செய்யக் கூடாது” என்று கூறியிருந்தார்.

இந்த விஷயம் சர்ச்சையான நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார் பாமா. அதில், வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய வேண்டாம் என்பது தொடர்பாக தான் பேசினேன். பெண்கள் யாரும் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை என பாமா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...