24 666d2084e7bef
சினிமாசெய்திகள்

மகன் சூர்யாவை பல முறை அடித்த விஜய் சேதுபதி.. வெளிப்படையான பேச்சு

Share

மகன் சூர்யாவை பல முறை அடித்த விஜய் சேதுபதி.. வெளிப்படையான பேச்சு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் மகாராஜா.

இப்படத்தை இயக்குனர் நித்திலன் என்பவர் இயக்கியிருந்தார். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் இப்படம் முதல் நாளே மிகப்பெரிய வசூலை செய்துள்ளது.

மகாராஜா படத்திற்காக ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி இருந்தார் விஜய் சேதுபதி. பல இடங்களில் பேட்டி கொடுத்து வந்த விஜய் சேதுபதி, அதில் ஒரு பேட்டியில் தனது மகனை அடித்தது குறித்து பேசியுள்ளார்.

இதில் “அவர் எடுக்கும் சில முடிவுகளுக்கு எதிரான கருத்துக்களை நான் கூறியிருக்கிறேன். சில நேரங்களில் அவரை திட்டி இருக்கிறேன். சில சமயங்களில் அடித்து இருக்கிறேன். அடித்ததும் மன்னிப்பு கேட்டுள்ளேன். ஒரு குழந்தைக்கு தான் செய்வது தவறு என தெரியாமல் அந்த தவற செய்கிறது. ஆனால், அது செய்வது தவறு என்பதை தெரிந்து நாம் அடிப்பது நம்மீது தானே தவறு. ஆனாலும் அந்த நேரத்தில் வரும் கோபம் காரணமாக அடித்து விடுகிறோம். பின் நம் குழந்தைகளை அணைகிறோம்” என கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2003ஆம் ஆண்டு ஜெஸ்ஸி என்பவர் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு சூர்யா எனும் மகனும், ஸ்ரீஜா எனும் மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...