23 64d4c0f00edbd
சினிமாசெய்திகள்

காதல் திருமணத்தால் தேவயானி அனுபவித்த வேதனை, டெலிவரி நேரத்தில்- ராஜகுமாரன் எமோஷ்னல்

Share

காதல் திருமணத்தால் தேவயானி அனுபவித்த வேதனை, டெலிவரி நேரத்தில்- ராஜகுமாரன் எமோஷ்னல்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தேவயானி.

தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், பெங்காலி என பல படங்கள் நடித்துள்ளவர் சிறந்த நாயகி என பல விருதுகளை வென்றுள்ளார். 2000ம் ஆண்டு கலைமாமணி விருது எல்லாம் பெற்றார்.

சினிமாவில் மார்க்கெட் குறைய அப்படியே சின்னத்திரை பக்கம் வந்தவர் கோலங்கள் தொடரில் அபி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கடைசியாக ஜீ தமிழில் புதுபுது அர்த்தங்கள் என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

நடிகை தேவயானி வீட்டில் தனது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் பல போராட்டங்களை தாண்டி இயக்குனர் ராஜகுமாரனை 2001ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என 2 மகள்கள் உள்ளனர்.

அண்மையில் தனது மகளுடன் ராஜகுமாரன் பேட்டி கொடுத்தார். அதில் அவர் பேசும்போது, நாங்கள் திருமணம் செய்த நேரத்தில் நான் அழகாக இல்லை என்று நிறைய விமர்சனம் செய்தார்கள்.

ஆனால் தேவயானி என்னை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை.

என்னை என்னுடைய அம்மா-அப்பா இப்படி பெற்றுவிட்டதால் தான் எல்லோரும் என்னை இப்படி எல்லாம் பேசுகிறார்கள், என்னைப் போல் குழுந்தை பிறந்து அந்த குழந்தையும் இந்த உலகத்தில் கஷ்டப்பட வேண்டாம் என குழந்தையே வேண்டாம் என இருந்தேன், ஆனால் தேவயானி அதற்கு மறுத்துவிட்டார்.

தேவயானி கர்ப்பமாக இருந்தபோது பிப்ரவரி மாதம் தேதி கொடுத்தார்கள், ஆனால் 48 நாட்களுக்கு முன்பே அவருக்கு வலி வந்துவிட்டது.

இரவு 12.5 போல் குழந்தை பிறந்தது, அன்று சொர்க்க வாசல் விசேஷம். அன்று எங்களுடன் யாருமே இல்லை, அந்த நேரத்தில் எங்க பக்கத்து வீட்டில் இருந்த ஒரு குடும்பம் தான் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள்.

குழந்தையை வளர்ந்து எடுப்பதற்கு தேவயானி மிகவும் கஷ்டப்பட்டார் என எமோஷ்னலாக பேசியுள்ளார் ராஜகுமாரன்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...