23 64d4c0f00edbd
சினிமாசெய்திகள்

காதல் திருமணத்தால் தேவயானி அனுபவித்த வேதனை, டெலிவரி நேரத்தில்- ராஜகுமாரன் எமோஷ்னல்

Share

காதல் திருமணத்தால் தேவயானி அனுபவித்த வேதனை, டெலிவரி நேரத்தில்- ராஜகுமாரன் எமோஷ்னல்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தேவயானி.

தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், பெங்காலி என பல படங்கள் நடித்துள்ளவர் சிறந்த நாயகி என பல விருதுகளை வென்றுள்ளார். 2000ம் ஆண்டு கலைமாமணி விருது எல்லாம் பெற்றார்.

சினிமாவில் மார்க்கெட் குறைய அப்படியே சின்னத்திரை பக்கம் வந்தவர் கோலங்கள் தொடரில் அபி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கடைசியாக ஜீ தமிழில் புதுபுது அர்த்தங்கள் என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

நடிகை தேவயானி வீட்டில் தனது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் பல போராட்டங்களை தாண்டி இயக்குனர் ராஜகுமாரனை 2001ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என 2 மகள்கள் உள்ளனர்.

அண்மையில் தனது மகளுடன் ராஜகுமாரன் பேட்டி கொடுத்தார். அதில் அவர் பேசும்போது, நாங்கள் திருமணம் செய்த நேரத்தில் நான் அழகாக இல்லை என்று நிறைய விமர்சனம் செய்தார்கள்.

ஆனால் தேவயானி என்னை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை.

என்னை என்னுடைய அம்மா-அப்பா இப்படி பெற்றுவிட்டதால் தான் எல்லோரும் என்னை இப்படி எல்லாம் பேசுகிறார்கள், என்னைப் போல் குழுந்தை பிறந்து அந்த குழந்தையும் இந்த உலகத்தில் கஷ்டப்பட வேண்டாம் என குழந்தையே வேண்டாம் என இருந்தேன், ஆனால் தேவயானி அதற்கு மறுத்துவிட்டார்.

தேவயானி கர்ப்பமாக இருந்தபோது பிப்ரவரி மாதம் தேதி கொடுத்தார்கள், ஆனால் 48 நாட்களுக்கு முன்பே அவருக்கு வலி வந்துவிட்டது.

இரவு 12.5 போல் குழந்தை பிறந்தது, அன்று சொர்க்க வாசல் விசேஷம். அன்று எங்களுடன் யாருமே இல்லை, அந்த நேரத்தில் எங்க பக்கத்து வீட்டில் இருந்த ஒரு குடும்பம் தான் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள்.

குழந்தையை வளர்ந்து எடுப்பதற்கு தேவயானி மிகவும் கஷ்டப்பட்டார் என எமோஷ்னலாக பேசியுள்ளார் ராஜகுமாரன்.

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...