1 14 scaled
சினிமாசெய்திகள்

விஜய் டிவி செல்லப்பிள்ளை டிடிக்கு இத்தனை கோடி சொத்துக்களா? ஆனால் அதைவிட இதுதான் பெரிசு..!

Share

விஜய் டிவி செல்லப்பிள்ளை டிடிக்கு இத்தனை கோடி சொத்துக்களா? ஆனால் அதைவிட இதுதான் பெரிசு..!

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை யார் என்று கேள்வி கேட்டால் உடனே அனைவரது பதிலும் டிடி என்பதாக இருக்கும் என்று தெரிந்த நிலையில் தற்போது அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1999 ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் போது விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமான டிடி, ‘உங்கள் தீர்ப்பு’ என்ற நிகழ்ச்சியை முதன் முதலில் தொகுத்து வழங்கினார். இதையடுத்து பாலசந்தர் இயக்கிய ’றெக்கை கட்டிய மனசு’ என்ற சீரியலில் நடித்த நிலையில் அதில் கிடைத்த பாப்புலாரிட்டி மூலம் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் டிடி, சில நிகழ்ச்சிகளை சொந்தமாக விஜய் டிவிக்காக தயாரித்திருந்தார்.

அவரது திருமண வாழ்க்கை மூன்றே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தாலும் அவர் தனது தொகுப்பாளினி தொழிலில் மட்டும் முடிவே இல்லாமல் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அவர் தொகுப்பாளினியாக ஒரு எபிசோடுக்கு மூன்று முதல் நான்கு லட்சம் வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில் தற்போது அவருக்கு 5 கோடிக்கு மேல் சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் டிடி சில தொழில்களை செய்து வருவதாகவும் அதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய் டிவியில் அவர் சம்பாதித்தது கோடி கணக்கில் என்றாலும் அவர் சம்பாதித்த மனிதர்கள் தான் விலைமதிப்பில்லாதது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட திரையுலகில் உள்ள அனைவரும் டிடிக்கு நெருக்கமானவர்கள் என்பதும் அதில் நயன்தாரா, த்ரிஷா உட்பட ஒரு சிலர் மிக நெருங்கிய தோழிகளாகவும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...