tamilni 452 scaled
சினிமாசெய்திகள்

மீனா மாதிரி அமைதியா இருப்பேன்னு பாத்தியா? தொலைச்சுபிடுவேன்: விஜயாவை மிரட்டும் ரோகிணி..!

Share

மீனா மாதிரி அமைதியா இருப்பேன்னு பாத்தியா? தொலைச்சுபிடுவேன்: விஜயாவை மிரட்டும் ரோகிணி..!

விஜய் டிவியில் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரோகிணி தான் சொன்ன பொய்யிலிருந்து சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளார் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியில் ரோகிணி தந்தை வரவில்லை என்று விஜயா கோபத்தில் இருக்கும் நிலையில் அடுத்த வாரம் வரும் எபிசோடுகளில் ரோகிணி உண்மை சொரூபம் தெரிய வாய்ப்பிருப்பதாகவும் இதனால் ரோகிணியையும் மீனாபோல் விஜயா நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் மீனா மாதிரி ரோகிணி அமைதியாக இருக்காமல் எதிர்த்து பேச இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. ரோகிணியை விஜயா திட்டும்போது ’நான் மீனா மாதிரி அமைதியாக இருப்பேன் என்று நினைத்துக் கொண்டிருக்காதீர்கள், எங்க அப்பா வரவில்லை என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்னை மரியாதை குறைவாக நடத்தினால் நடக்கிறது வேறு’ என்று கூறும் காட்சிகள் வர இருப்பதாகவும் அதுமட்டுமின்றி மனோஜிடம் ’நாம் இருவரும் தனியாக போய்விடலாம், உங்களுக்கு மனைவி வேண்டுமென்றால் என்னுடன் வாருங்கள், இல்லை அம்மா தான் வேண்டுமென்றால் இங்கேயே இருந்து கொள்ளுங்கள்’ என்று கோபமாக பேசிவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரோகிணியை அண்ணாமலை சமாதானப்படுத்த முயற்சி போது முயற்சித்த போது ’உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது, ஆனால் அத்தை மீது எனக்கு சுத்தமாக நல்ல அபிப்பிராயம் இல்லை, எப்ப பார்த்தாலும் பணம், பணம்ன்னே இருக்காங்க, எனவே என்னால் இந்த வீட்டில் தொடர்ந்து வாழ முடியாது’ என்று கூறிவிட்டு செல்வது போன்ற காட்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று தான் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் பார்வையாளர்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும் ’சிறகடிக்க ஆசை’ கதைக்குழுவினர் எப்படி இந்த சீரியலை கொண்டு போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...