1 14 scaled
சினிமாசெய்திகள்

விஜய் டிவி செல்லப்பிள்ளை டிடிக்கு இத்தனை கோடி சொத்துக்களா? ஆனால் அதைவிட இதுதான் பெரிசு..!

Share

விஜய் டிவி செல்லப்பிள்ளை டிடிக்கு இத்தனை கோடி சொத்துக்களா? ஆனால் அதைவிட இதுதான் பெரிசு..!

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை யார் என்று கேள்வி கேட்டால் உடனே அனைவரது பதிலும் டிடி என்பதாக இருக்கும் என்று தெரிந்த நிலையில் தற்போது அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1999 ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் போது விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமான டிடி, ‘உங்கள் தீர்ப்பு’ என்ற நிகழ்ச்சியை முதன் முதலில் தொகுத்து வழங்கினார். இதையடுத்து பாலசந்தர் இயக்கிய ’றெக்கை கட்டிய மனசு’ என்ற சீரியலில் நடித்த நிலையில் அதில் கிடைத்த பாப்புலாரிட்டி மூலம் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் டிடி, சில நிகழ்ச்சிகளை சொந்தமாக விஜய் டிவிக்காக தயாரித்திருந்தார்.

அவரது திருமண வாழ்க்கை மூன்றே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தாலும் அவர் தனது தொகுப்பாளினி தொழிலில் மட்டும் முடிவே இல்லாமல் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அவர் தொகுப்பாளினியாக ஒரு எபிசோடுக்கு மூன்று முதல் நான்கு லட்சம் வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில் தற்போது அவருக்கு 5 கோடிக்கு மேல் சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் டிடி சில தொழில்களை செய்து வருவதாகவும் அதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய் டிவியில் அவர் சம்பாதித்தது கோடி கணக்கில் என்றாலும் அவர் சம்பாதித்த மனிதர்கள் தான் விலைமதிப்பில்லாதது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட திரையுலகில் உள்ள அனைவரும் டிடிக்கு நெருக்கமானவர்கள் என்பதும் அதில் நயன்தாரா, த்ரிஷா உட்பட ஒரு சிலர் மிக நெருங்கிய தோழிகளாகவும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
05 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வரி செலுத்துவோருக்கு ‘கோல்ட், சில்வர்’ கார்டு: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்திய புதிய அதிரடி சலுகைத் திட்டம்!

நாட்டின் வரி செலுத்தும் கலாசாரத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தமது வரிப் பொறுப்புக்களைத் துல்லியமாகவும்,...

04 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிவுல் ஓயா திட்டம்: நில அபகரிப்பிற்கு எதிரான கூட்டுப் போராட்டம் – யாழ். ஊடக அமையத்தில் சிவில் சமூகம் தீர்மானம்!

யாழ். ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான முக்கியத்துவமிக்க திறந்த...

03
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகள்: தமிழக அரசின் குரல் என்றும் ஒலிக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளின் நலனைப் பேணுவதிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை...

02
செய்திகள்உலகம்

2 நாட்களில் பயணம்: நிலவில் சுயசார்பு நகரம் அமைக்க ஈலோன் மஸ்க் அதிரடி திட்டம்!

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) தலைவர் ஈலோன் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கு...