tamilni 93 scaled
சினிமாசெய்திகள்

சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’…! குணா குகையை தேடி படையெடுக்கும் டூரிஸ்ட்

Share

சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’…! குணா குகையை தேடி படையெடுக்கும் டூரிஸ்ட்

மலையாள படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் வசூலை வாரிக் குவித்து வருகிறது. சுமார் 10 நாட்களில் 90 கோடி ரூபாய் மட்டும் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படம் கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் மஞ்சும்மல் பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் நண்பர்களில் ஒருவர் குணா குகையில் சிக்கிக் கொள்ள, அவரை எப்படி மீட்டார்கள் என்பது தான் கதை.

அதிலும் இந்த படத்தில் இடம்பெறும் குணா படத்தின் பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடலுக்கு இப்போதும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த பட குழுவினரை நேரில் சந்தித்து கமலஹாசனும், உதயநிதி ஸ்டாலினும் உட்பட பலர் பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், தற்போது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து குணா குகையை பார்ப்பதற்காக பயணிகள் படையெடுத்துள்ளார்கள்.

அதன்படி தற்போது சமூக வலைதளங்களில் குணா குகைக்கு செல்லும் பயணிகள் மற்றும் இளைஞர்களின் வீடியோ வைரலாகியுள்ளது.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...