tamilni 105 scaled
சினிமாசெய்திகள்

கணவரை பிரிந்தாரா இளையராஜா மகள் பவதாரிணி? உண்மையில் நடந்தது என்ன

Share

கணவரை பிரிந்தாரா இளையராஜா மகள் பவதாரிணி? உண்மையில் நடந்தது என்ன

இளையராஜா மகள் பவதாரிணி சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அவர் கணவர் சபரியிடம் இருந்து பிரிந்து விட்டதாக வெளியான தகவலுக்கு ஜெயந்தி கண்ணப்பன் பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார்.

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி(47) புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இந்நிலையில் பவதாரிணியும், அவரது கணவர் சபரியும் பிரிந்து விட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், ஜெயந்தி கண்ணப்பன் வாவ் தமிழா தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், பவதாரிணியும், சபரியும் உண்மையில் பிரியவில்லை. அவர்கள் ஆத்மார்த்தமான தம்பதிகளாகவே இருந்தனர். பவதாரிணி இலங்கைக்கு செல்லவே இல்லை என்றெல்லாம் செய்திகள் வெளியாகுகின்றன. இது உண்மையே இல்லை, இதற்கு அவர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற தேவையே இல்லை என்று ஜெயந்தி கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பவதாரிணியின் மறைவால் சபரி மிகப்பெரிய தூக்கத்தில் உள்ளார், அவர் அனைவரையும் மாதிரி வெளிப்படையாக அழுது தன்னுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்ட தெரியாதவர்.

பவதாரிணியின் இறப்பு செய்தியை கேட்டு சபரி அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டார். பவதாரணி திருமணம் ஆன பிறகு சபரியுடன் தான் இருந்தார், தம்பதி தேவையில்லாமல் இளையராஜா வீட்டிற்கு கூட வருவது இல்லை. சபரி ஒருபோதும் பவதாரிணியை விட்டுக் கொடுக்க மாட்டார்.

அவர்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என ஜெயந்தி கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பவதாரிணிக்கு நானும், அவரது அம்மாவும் தான் மாப்பிள்ளை தேடினோம், ஆனால் வருகின்ற வரன் எதுவும் பவதாரிணிக்கு பிடிக்கவில்லை.

அப்போது தான் செங்கல்பட்டு அருகே உள்ள கன்னி கோவிலுக்கு சென்று வந்தால் நல்ல வரன் அமையும் என தெரியவந்தது, உடனே இருவரும் அங்கு சென்று வந்தோம்.

அடுத்தவாரமே மதுரை சேர்ந்த சபரியின் வரன் அமைந்து, இருவருக்கும் திருமணம் முடிவானது, பவதாரிணி திருமணத்திற்காக ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியுடன் கூடி இருந்தது.

கடந்த 2005ம் ஆண்டு பவதாரணி, பத்திரிகை அதிபர் எஸ்.என்.ராமச்சந்திரன் மகன் சபரி ராஜை காதலித்து கரம் பிடித்ததாகவும் செய்திகள் உள்ளன என நேர்காணலில் ஜெயந்தி கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...