tamilni 72 scaled
சினிமாசெய்திகள்

நடிகை ஶ்ரீதேவி மரண விவகாரத்தில் சிக்கிய பெண் பிரபலம்: சிபிஐ கூறும் காரணங்கள் தெரியுமா?

Share

நடிகை ஶ்ரீதேவி மரண விவகாரத்தில் சிக்கிய பெண் பிரபலம்: சிபிஐ கூறும் காரணங்கள் தெரியுமா?

நடிகை ஶ்ரீதேவி மரணம் தொடர்பாக யூடியூப்பர் ஒருவரின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு துபாயில் உள்ள ஹோட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்த நிலையில் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகை ஶ்ரீதேவியின் மரணத்தில் எந்தவொரு மர்மமும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இருப்பினும், நடிகை ஶ்ரீதேவி மரணம் குறித்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தை சேர்ந்த தீப்தி ஆர். பின்னிதி என்ற பெண் யூடியூபர் சர்ச்சையான பல தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

அந்த வகையில் யூடியூபர் பின்னிதி(youtuber pinniti) இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் கடிதங்கள் என சில ஆவணங்களை அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து அவர் வெளியிட்ட கடிதம் உண்மைதானா என்பதை ஆராயும் விதமாக ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் யூடியூபர் பின்னிதி வெளியிட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் கடிதங்கள் என கூறி போலியானவற்றை பகிர்ந்தது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் போலி ஆவணங்களை பகிர்ந்தது ஆகிய குற்றத்திற்காக யூடியூபர் பின்னிதி மற்றும் அவரது வழக்கறிஞர் பரத் சுரேஷ் காமத் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் தங்கள் தரப்பு வாதத்தை சிபிஐ பதிவு செய்யாமல் வழக்கு போடப்பட்டு இருப்பதாக யூடியூபர் பின்னிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 18 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முடங்கும் சுகாதாரத் துறை? – தரவுகளைப் புறக்கணிக்க மருத்துவர்கள் சங்கம் முடிவு; நாளை முதல் போராட்டம் தீவிரம்!

தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய எழுத்துப்பூர்வ உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகக் கூறி, நாளை (18) முதல்...

image 1200x800 19
செய்திகள்இலங்கை

சபரிமலை வழக்கு: ஏப்ரல் 7 முதல் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை! – சட்டப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்ற 2018-ஆம் ஆண்டின் தீர்ப்பை எதிர்த்துத்...

image 1200x800 31
செய்திகள்உலகம்

பிரித்தானியாவின் புதிய பயண விதிகளால் பெண்களுக்குச் சிக்கல்! – பெயர்ப் பொருத்தமின்மை பாரபட்சமாக அமைவதாகக் குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் புதிய எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் எதிர்வரும் பிப்ரவரி 25 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன....

image 1200x800 17 1
செய்திகள்உலகம்

விண்ணில் தோன்றும் நெருப்பு வளையம்! – 2026-இன் முதல் சூரிய கிரகணம் இன்று; எங்கே காணலாம்?

2026-ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (17) செவ்வாய்க்கிழமை நிகழ்கிறது. இது ஒரு ‘வளைய...